ஆப்நகரம்

காசு மழை பொழியும் பென்சன் திட்டம்.. உங்க மனைவிக்கு சிறந்த பரிசு!

உங்களுடைய மனைவியின் பெயரில் இந்த சிறப்புக் கணக்கைத் திறந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.44,793 கிடைக்கும்.

Samayam Tamil 13 Aug 2022, 11:06 am
இந்த வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் யாருக்கு எப்போது என்ன ஆகும் என்றே தெரியாது. நீங்கள் இல்லாத போது எதிர்காலத்தில் உங்கள் மனைவி யாரையும் பணத்துக்காகச் சார்ந்திருக்காமல் இருக்க நீங்கள் விரும்பினால், இன்றே அவருக்கு ஒரு நிரந்தரமான வருமானத்தை ஏற்பாடு செய்வது நல்லது. அதற்கு நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.
Samayam Tamil pension


உங்கள் மனைவி பெயரில் தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டியதும் மொத்த தொகையை வழங்கும். இதனுடன், அவர்கள் ஒவ்வொரு மாதமும் பென்சன் வடிவில் நிரந்தரமான வருமானத்தைப் பெறுவார்கள். இது மட்டுமின்றி, NPS கணக்கின் மூலம் உங்கள் மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

தேசிய பென்சன் திட்டத்தின் கணக்கில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் 1,000 ரூபாயில் உங்கள் மனைவியின் பெயரில் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். NPS கணக்கு 60 வயதில் முதிர்ச்சியடைகிறது. புதிய விதிகளின்படி, நீங்கள் விரும்பினால், மனைவியின் வயது 65 வரை NPS கணக்கை வைத்திருக்கலாம்.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

உங்கள் மனைவிக்கு இப்போது 30 வயது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய என்பிஎஸ் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்தால் ஆண்டுதோறும் முதலீட்டில் 10 சதவீதம் வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் ரூ.1.12 கோடி இருக்கும். இதில் அவர்களுக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இது தவிர, அவருக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 45,000 ரூபாய் பென்சன் பணமும் கிடைக்கும்.

இந்த ஓய்வூதியத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பெறுவார்கள் என்பது மிக முக்கியமான விஷயம். உடனே இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கி உங்களுடைய வாழ்க்கைத் துணையின் எதிர்காலத்தை இப்போதே பிரகாசமாக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்