ஆப்நகரம்

சுய உதவி குழுக்களுக்கு ஒரு சான்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை விமான நிலையத்தில் சுயஉதவிக் குழு விற்பனை மையம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2022, 12:21 pm
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் மற்றும் ஆண்கள் தங்களுக்குள் கூட்டாக இணைந்து செயல்படும் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அவ்சார் என்ற திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினருக்கான விற்பனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil SHG


கிராமப்புற சமுதாயத்திற்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக சுய உதவிக் குழுக்கள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து, வருமானத்திற்கான ஆதாரங்களை சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்ள சுயஉதவிக் குழுக்கள் உதவுகின்றன. கொரோனா பிரச்சினைக்குப் பிறகு சுய உதவிக் குழுவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் விமான நிலையங்களில் சுய உதவிக் குழுவினருக்கு இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்படும் விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

சிலிண்டர் டெலிவரி - இனி செலவே ஆகாது மக்களே!
இந்த விற்பனை மையத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 100-200 சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் விற்பனை மையம் அமைக்க விரும்பும் சுயஉதவிக் குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் https://www.aai.aero/en/node/add/shg-user-detail என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்