ஆப்நகரம்

பள்ளிப் புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதி!

ஊரடங்கு தடைக் காலத்தில் பள்ளிப் புத்தகங்கள், ரீசார்ஜ் அட்டைகள் போன்றவற்றின் விற்பனையை மீண்டும் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2020, 10:16 pm
கொடூர கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரையில் 652 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20,471 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனையும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன.
Samayam Tamil பள்ளிப் புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதி


ஊரடங்கு நடவடிக்கையால் ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, மறுபுறம் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியது. இவற்றைக் கருத்தில்கொண்டு, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும், 50 சதவீதப் பணியாளர்களுடன் சில துறைகளில் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

சிறு நிறுவனங்களைச் சீரழிக்கும் கொரோனா!

இவ்வாறாக, பல்வேறு துறைகளில் தொழில் நடவடிக்கைகளுக்கும் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் புத்தக விற்பனை மையங்களைத் திறக்கவும் வேறு சில சேவைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தக விற்பனை மையங்களில் பள்ளிப் புத்தகங்களை விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீசார்ஜ் அட்டைகள், மின்விசிறிகள் போன்றவற்றை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு... பண மழையில் நெட்ஃப்ளிக்ஸ்!

நகர்ப்புறங்களில் உள்ள மாவு மில், கால்நடை சம்பந்தமான ஆலைகள் போன்றவை இயங்கவும் அனுமதி கிடைத்துள்ளது. எலெக்ட்ரானிக் சேவைகளுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் சரீர இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்