ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம்.. இனி உங்க காட்டில் மழைதான்!

சீனியர் சிட்டிசன்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.

Samayam Tamil 4 May 2022, 5:42 pm
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று திடீரென பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% அதிகரித்து 4.40% ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
Samayam Tamil loan-pti1


பணவீக்கத்தின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமலேயே இருந்த நிலையில் தற்போது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி ஆகும். ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிக் கடன் வாங்கியோருக்கு EMI செலவு உயரும். வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்கியோர் அதிக EMI செலுத்த வேண்டிய நிலை வரும்.

பால் டூ பெட்ரோல்.. இதெல்லாம் ரேட் அதிகமா இருக்கும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
எனினும், ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களில் முதலீடு செய்வோர் பயனடைவார்கள். ஏனெனில், ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டால் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயரும்.

கடைசியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட போது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி குறைந்தது. இதனால் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு லாபம் குறைந்தது. குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர். வட்டி குறைப்பால் சீனியர் சிட்டிசன்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக, சீனியர் சிட்டிசன்கள் வெகுவாக பயனடைவார்கள். முன்பை விட சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்