ஆப்நகரம்

SCSS: சீனியர் சிட்டிசன்களுக்கு மாதம் ரூ.40,000 வருமானம்.. எப்படின்னு பாருங்க!

சீனியர் சிட்டிசன்கள் மிக எளிதாக மாதம் 40,000 ரூபாய் வருமானம் ஈட்டுவது எப்படி?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Feb 2023, 5:57 pm
சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறுவதற்காக சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வரம்பையும் அரசு உயர்த்தியுள்ளது.
Samayam Tamil senior citizen savings scheme
senior citizen savings scheme - சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்


தற்போது சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இதன்படி, 60 வயதை தொட்ட சீனியர் சிட்டிசன்கள் கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து மாதம் தோறும் 40,000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்க முடியும்.

தற்போது சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 60 வயதை தாண்டியவர்கள் முதலீடு செய்யலாம். இதுமட்டுமல்லாமல், பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் 55 வயதை தாண்டிய பிறகும், பணி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 50 வயதை தாண்டிய பிறகும் முதலீடு செய்யலாம்.

இவர்கள் இனி தபால் அலுவலகத்துக்கு சென்று சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கினால் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலலாம். ஆக, 8% வட்டி என்றால் ஒரு காலாண்டுக்கு 60,000 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். ஒரு காலாண்டுக்கு மூன்று மாதங்கள் என்ற வீதம் மாதத்துக்கு 20,000 ரூபாய் வருமானம் என கணக்கில் கொள்ளலாம்.

இதுவே, 60 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன் கணவன் மற்றும் மனைவி இருவரும் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் தலா 30 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் இருவருக்கும் தலா 20,000 ரூபாய் என மொத்தம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்