ஆப்நகரம்

AI போட்டியில் கூகுள் பின்னடைவு.. சைலண்டாக சம்பவம் செய்யும் புதிய அணி!

ஏஐ போட்டியில் கூகுள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த இஞ்சினியர் எச்சரித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 May 2023, 5:17 pm
ஏஐ (AI) துறையில் நிலவும் போட்டியில் கூகுள் (Google) நிறுவனம் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் மூத்த இஞ்சினியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil google
google



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் OpenAI நிறுவனம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்போட்டை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த சாட் ஜிபிடிக்கு உலகம் முழுவதுமே வெகுவான வரவேற்பு கிடைத்துள்ளது.

சாட் ஜிபிடிக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் ஏஐ சாட்போட் உருவாக்கி வருகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனம் Bard என்ற சாட்போட்டை சாட் ஜிபிடிக்கு போட்டியாக உருவாக்கியுள்ளது. ஆனால், Bard சில தவறான தகவல்களை தருவதாக விமர்சனங்களும் எழுந்தன.

மறுபுறம் அமேசான் போன்ற இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏஐ சாட்போட் உருவாக்கி வருகின்றன. சீனாவிலும் அலிபாபா, டென்செண்ட், பெய்டு போன்ற நிறுவனங்கள் சொந்தமாக ஏஐ சாட்போட் உருவாக்கியுள்ளன. இந்தியாவில் டிசிஎஸ் (TCS) நிறுவனம் ஏஐ சாட்போட் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏஐ போட்டியில் கூகுள் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சீனியர் இஞ்சினியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் இந்த விமர்சனக் கட்டுரை கசிந்து தொழில்நுட்ப வட்டாரங்களில் வைரலாக பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

அதில் அவர், “OpenAI என்ன செய்கிறது என்பதை அதிகம் கவனித்து வருகிறோம். ஆனால், அடுத்த மைல்கல்லை தொடப்போவது யார்? இந்த போட்டியில் நாம் வெல்லும் நிலையில் இல்லை என்பதே அசவுகரியமான உண்மை. அதே நேரம் OpenAI நிறுவனமும் வெல்லாது.

நாம் இங்கு சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது நமது உணவை ஒரு மூன்றாவது அணி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. அதுதான் Open source தொழில்நுட்பம். நம்மிடம் (கூகுள்) ரகசிய யுக்தி ஏதும் இல்லை. கூகுளுக்கு வெளியே மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை கற்றுக்கொண்டு நாம் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்