ஆப்நகரம்

மீண்டும் சரிந்த இந்தியப் பங்குச் சந்தை; அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

புதுடெல்லி: இந்தியப் பங்குச் சந்தை இன்றும் சரிவில் முடிவடைந்துள்ளது.

TIMESOFINDIA.COM 5 Oct 2018, 6:01 pm
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் படிப்படியாக இறக்கம் கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் ஏற்பட்ட புதிய இறக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
Samayam Tamil Sensex


வர்த்தகத்திற்கு இடையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது. ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.50%ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுவும் பங்குச்சந்தையை ஆட்டம் காண வைத்தது.

ஏற்கனவே 400 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகி வந்த 30 ஷேர் பி.எஸ்.சி சென்செக்ஸ், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அடுத்த அரை மணி நேரத்தில் மேலும் 550 புள்ளிகள் சரிந்தன.

வர்த்தகத்தின் முடிவில் சற்று ஏற்றம் கண்டு 792.17 புள்ளிகள் குறைந்து, சென்செக்ஸ் 34,376.99 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

இதேபோல் 50 ஷேர் என்.எஸ்.சி நிஃப்டி 2.67% அளவிற்கு தடுமாற்றம் கண்டது. இறுதியில் 282.80 புள்ளிகள் சரிந்து, 10,316.45 புள்ளிகளில் முடிவடைந்தது.

Sensex battered, rupee breaches 74-mark as RBI keeps repo rate changed.

அடுத்த செய்தி

டிரெண்டிங்