மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 38 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் இன்றைய பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி உறுதியாகியிருந்தாலும், ஹரியானாவில் இழுபறி நீடிக்கிறது. இதனால் இன்றைய பங்குச் சந்தை நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.44 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவில் ஈசியா தொழில் தொடங்கலாம்... வாங்க வாங்க...
இன்றைய தினத்தில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 39,223.01 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன் பின்னர் தேர்தல் முடிவு எதிரொலியாக வர்த்தக நேர மத்தியில் சென்செக்ஸ் 39,327.15 புள்ளிகளாக உயர்ந்தது. முடிவில் 38.44 புள்ளிகள் அல்லது 0.0098 சதவீத வீழ்ச்சியுடன் 39,020.39 புள்ளிகளில் முடிவுற்றது.
கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த வேலை மட்டும் போதுமா?
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ரிலையன்ஸ், ஹெச்.சி.எல்., ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ், இந்தஸ் இந்த், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
பொய்க்கணக்கு காட்டி மரண அடி வாங்கிய இன்ஃபோசிஸ்!
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11,661.65 புள்ளிகளுடன் தொடங்கியது. பின்னர் அதிபட்சமாக 11,679.60 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,534.65 புள்ளிகளாகவும் இருந்தது. வர்த்தக நேர முடிவில் 19 சதவீத வீழ்ச்சியுடன் 11,582.60 புள்ளிகளில் நிஃப்டி நிலைபெற்றது. இது நேற்றைய தினத்தை விட 21.50 புள்ளிகள் குறைவாகும்.
இந்தியாவில் ஈசியா தொழில் தொடங்கலாம்... வாங்க வாங்க...
இன்றைய தினத்தில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 39,223.01 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன் பின்னர் தேர்தல் முடிவு எதிரொலியாக வர்த்தக நேர மத்தியில் சென்செக்ஸ் 39,327.15 புள்ளிகளாக உயர்ந்தது. முடிவில் 38.44 புள்ளிகள் அல்லது 0.0098 சதவீத வீழ்ச்சியுடன் 39,020.39 புள்ளிகளில் முடிவுற்றது.
கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த வேலை மட்டும் போதுமா?
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ரிலையன்ஸ், ஹெச்.சி.எல்., ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ், இந்தஸ் இந்த், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
பொய்க்கணக்கு காட்டி மரண அடி வாங்கிய இன்ஃபோசிஸ்!
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11,661.65 புள்ளிகளுடன் தொடங்கியது. பின்னர் அதிபட்சமாக 11,679.60 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,534.65 புள்ளிகளாகவும் இருந்தது. வர்த்தக நேர முடிவில் 19 சதவீத வீழ்ச்சியுடன் 11,582.60 புள்ளிகளில் நிஃப்டி நிலைபெற்றது. இது நேற்றைய தினத்தை விட 21.50 புள்ளிகள் குறைவாகும்.