இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 433.56 புள்ளிகளும் நிப்டி 139 புள்ளிகளும் இழந்துள்ளன. வியாழக்கிழமை வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 433.56 புள்ளிகள் சறுக்கி 1.14 சதவீதம் வீழ்ச்சியுடன் 37,673 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 139 புள்ளிகள் இழந்து 1.23 சதவீதம் பின்னடைந்து 11,175 புள்ளிகளில் நிலைகொண்டது.
தேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.9 சதவீதம் மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 1.2 சதவீதம் சரிந்தன.
நிப்டியில் ஓஎன்ஜிசி, விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன. ஜீ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன.
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்ப்ட்ட முடிவுகளை சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அப்போது, நடப்பு நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதக் கணிப்பு 6.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதம் இது 6.9 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆர்பிஐயின் இந்த அறிவிப்பு சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
ரெபோ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
முக்கிய நிறுவனங்களின் பங்குகள்:
தேசிய பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 1.03 சதவீதம் உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு 0.27 சதவீதம் வீழ்ந்தது. ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளின் மதிப்பு 2.79 சதவீதம் சறுக்கியது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 0.85 சதவீதம் குறைந்தது. ஹெச்டிஎப்சி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 0.10 சதவீதம் முன்னேறியது.
மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி கேட்வில்லை: சக்திகாந்த தாஸ் விளக்கம்
முக்கிய துறைகளில் பங்குகள்:
தேசிய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது வங்கிகள் துறை பங்குகள் மதிப்பு 2.40 சதவீதம், ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 1.19 சதவீதம், உலோகத் துறை பங்குகள் மதிப்பு 1.26 சதவீதம், மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் மதிப்பு 1.51 சதவீதம் கவிழ்ந்தன. ஐடி துறை பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் அதிகரித்தது.
பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் இருவர் கைது: ரூ.3,500 கோடி சொத்துக்கள் முடக்கம்
தேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.9 சதவீதம் மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 1.2 சதவீதம் சரிந்தன.
நிப்டியில் ஓஎன்ஜிசி, விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன. ஜீ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன.
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்ப்ட்ட முடிவுகளை சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அப்போது, நடப்பு நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதக் கணிப்பு 6.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாகக் கூறினார். ஆகஸ்ட் மாதம் இது 6.9 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆர்பிஐயின் இந்த அறிவிப்பு சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
ரெபோ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
முக்கிய நிறுவனங்களின் பங்குகள்:
தேசிய பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 1.03 சதவீதம் உயர்ந்தது. ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு 0.27 சதவீதம் வீழ்ந்தது. ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளின் மதிப்பு 2.79 சதவீதம் சறுக்கியது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 0.85 சதவீதம் குறைந்தது. ஹெச்டிஎப்சி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 0.10 சதவீதம் முன்னேறியது.
மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி கேட்வில்லை: சக்திகாந்த தாஸ் விளக்கம்
முக்கிய துறைகளில் பங்குகள்:
தேசிய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது வங்கிகள் துறை பங்குகள் மதிப்பு 2.40 சதவீதம், ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 1.19 சதவீதம், உலோகத் துறை பங்குகள் மதிப்பு 1.26 சதவீதம், மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் மதிப்பு 1.51 சதவீதம் கவிழ்ந்தன. ஐடி துறை பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் அதிகரித்தது.
பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் இருவர் கைது: ரூ.3,500 கோடி சொத்துக்கள் முடக்கம்