ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு

வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.

TOI Contributor 18 Apr 2016, 4:19 pm
வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.
Samayam Tamil sensex ends 190 points higher led by infosys nifty reclaims 7900
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு


திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. சர்வதேச சந்தைகளில் முதலீட்டுக்குச் சாதகமான நிலை இருந்தது. உள்நாட்டிலும், மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகக் கூறப்பட்டது. இதனால், வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானது.

அத்துடன், முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், எதிர்பார்த்தபடி உள்ளன. இதுவும் பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரிக்க காரணமாகும். முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்தன. மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,427 பங்குகள் விலை உயர்ந்தும், 1,183 பங்குகள் விலை குறைந்தும் இருந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 190 புள்ளிகள் அதிகரித்து, 25,816 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து, 7,915 ஆக முடிவடைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்