ஆப்நகரம்

வர்த்தகம் நிறைவு - சென்செக்ஸ் 342 புள்ளிகள் உயர்வு; 10,850 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, பங்கு வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது.

Samayam Tamil 25 Feb 2019, 4:41 pm
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக, இன்றைய இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. பிற்பகல் வேளையில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
Samayam Tamil Sensex


இறுதியில் 342 புள்ளிகள் அதிகரித்து, சென்செக்ஸ் 36,213.38 புள்ளிகளில் முடிவுற்றது. இதேபோல் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து, 10,880.10 புள்ளிகள் நிறைவு பெற்றது. டிசிஎஸ் பங்குகள் 3% அதிகரித்து, ரூ.1,985 என்ற அளவில் உயர்ந்தன.

இன்போசிஸ் 3% அளவிற்கு உயர்ந்து, ரூ.754 என்ற விலைக்கு அதிகரித்தது. அதிகப்படியான வெளிநாட்டு நிதி வருகை, உள்நாட்டு முதலீட்டாளர்களின் அதிகப்படியான வாங்கும் திறன் ஆகியவற்றால் பங்குகள் வலுவான நிலையில் காணப்பட்டன.

ஆசியப் பங்குகள் 0.14% அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்