ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு

வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.

TNN 22 May 2017, 4:45 pm
வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.
Samayam Tamil sensex ends higher but on negative breadth
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவு


ஜிஎஸ்டி வரிவிதிப்பை, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய, அந்நிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம்காட்டுகின்றனர்.

அத்துடன், உள்நாட்டில் நிலவும் சாதகமான பொருளாதார காரணங்களால், பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே, வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.

இதையடுத்து, அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் துறைசார்ந்த பங்குகள் அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன. எனினும், பிற்பகலில் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஒருநிலைக்குள்ளாகவே இருந்தது.

மும்பை பங்குச்சந்தை பட்டியலில் உள்ள 1,837 பங்குகள் விலை சரிந்தும், 887 பங்குகள் விலை அதிகரித்தும் முடிந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து, 30,570 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து, 9,438 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

The S&P BSE Sensex ended at 30,570, up 106 points, while the broader Nifty50 settled at 9,438, up 10 points.

அடுத்த செய்தி

டிரெண்டிங்