ஆப்நகரம்

தேர்தல் அறிவிப்பால் என்னமா உயருது சென்செக்ஸ் - 11,100 புள்ளிகளில் எகிறி அடித்த நிஃப்டி!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை நல்ல ஏற்றம் கண்டன.

THE ECONOMIC TIMES 11 Mar 2019, 1:22 pm
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடன், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் காணப்பட்டன. சர்வதேச அளவிலான பொருளாதாரத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவுவதால், அது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.
Samayam Tamil Sensex


நேற்று 17வது மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தது. இன்று காலை 9.25 மணியளவில் பிஎஸ்சி சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து, 36,902 புள்ளிகளில் வர்த்தகமானது.

இதேபோல் நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து, 11,111 புள்ளிகளில் வர்த்தகமானது. அப்போது பிஎஸ்சி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இண்டைசிஸ் ஆகியவை முறையே 0.68% மற்றும் 0.73% என ஏற்றம் கண்டன.

சென்செக்ஸ் கிட்டியை பொறுத்தவரை என்.டி.பி.சி(0.46% சரிவு), ஐடிசி(0.15% சரிவு), இண்டஸ்இண்ட் பேங்க்(0.06%) ஆகிய 3 பங்குகள் மட்டும் சரிவுடன் காணப்பட்டன. ஓ.என்.ஜி.சி 2% லாபம் கண்டுள்ளது. இது சென்செக்ஸில் லாபம் ஈட்டும் பங்குகளில் முதன்மையாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்