ஆப்நகரம்

புதிய உச்சம் தொட்டு, வரலாறு படைத்த சென்செக்ஸ், நிஃப்டி- முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

என்.எஸ்.இயில் 11 செக்டாரில் 9 பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

Samayam Tamil 3 Jun 2019, 2:52 pm
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு 426 புள்ளிகள் அதிகரித்து, சென்செக்ஸ் 40,140 என்ற புதிய உச்சம் அடைந்தது.
Samayam Tamil Sensex


இதேபோல் என்.எஸ்.இ நிஃப்டி 50 ஆனது 127 புள்ளிகள் உயர்ந்து, முதல் முறையாக 12,050 புள்ளிகளைத் தொட்டது. பிற்பகல் 2.13 மணியளவில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் அதிகரித்து, 40,122 என்ற புள்ளிகளிலும், என்.எஸ்.இ நிஃப்டி 50 இண்டக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து, 12,045 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமானது.

இதன் காரணமாக ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் நல்ல லாபம் ஈட்டின.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால், முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இன்றைய நிலவரப்படி, சர்வதேச எண்ணெய் விலை 1% குறைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு, கச்சா எண்ணெய் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்.எஸ்.இயில் 11 செக்டாரில் 9 பங்குகள், 1.5% உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்