ஆப்நகரம்

Stock Market: மார்கெட் பாசிட்டிவ் - டாப் பங்குகள் இதோ!

இன்று பங்கு வர்த்தகத்தில் ஐடி பங்குகள், ஆட்டோ பங்குகள் பாசிடிவாக இருக்கின்றன.

Samayam Tamil 6 Oct 2020, 10:42 am

இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியபின் காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 337.36 புள்ளிகள் உயர்ந்து 39,311.06ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 11,591.45ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி 5.53% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக மகிந்த்ரா 3.61%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.92%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.80%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.57% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக டிசிஎஸ் 1.36% சரிந்துள்ளது. அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 0.90%, எண்டிபிசி 0.36%, சன் பார்மா 0.24% சரிந்துள்ளன.

வருமான வரித் தாக்கல்: ஆன்லைனில் பதிவுசெய்வது எப்படி?

நிப்டியில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 6.24% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி 5.43%, மகிந்த்ரா 3.79%, அதானி போர்ட்ஸ் 2.85%, ஏசியன் பெயிண்ட்ஸ் 2.78%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.76%, யூபிஎல் 1.73%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.62% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக விப்ரோ 2.23%, டிசிஎஸ் 1%, கிரசிம் 0.87%, இன்ஃபோசிஸ் 0.79%, ஹிண்டால்கோ 0.78% சரிந்துள்ளன.

இன்று பங்கு வர்த்தகம் தொடக்கத்தில் வங்கிப் பங்குகள், ஆட்டோ பங்குகள் முன்னணியில் இருக்கின்றன. ஒருசில முக்கிய ஐடி பங்குகள் மட்டும் சறுக்கியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை உயர்ந்துள்ளதால் அதன் பங்கு சுமார் 7% உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 பைசா குறைந்து 73.35ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்