Sensex nose dives over 760 points; 36,563
Sensex dives, Sensex today, Nifty today, Nifty ends below 10,800, நிப்டி, சென்செக்ஸ்,
ஆட்டோ மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளை பெரிய அளவில் இன்று முதலீட்டாளர்கள் விற்றதால், சென்செக்ஸ் இன்று மட்டும் 760 புள்ளிகள் குறைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் நடந்து வருவதும் இன்றைய பங்குச் சந்தையில் எதிரொலித்து இருப்பதும் சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், ஜிடிபி குறைந்து இருப்பது, முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் இன்று மட்டும் 2.17 சதவீதம் குறைந்து, 36,521ஆக உள்ளது. இதேபோல் நிப்டியும், 235புள்ளிகள் குறைந்து, அதாவது 2.13 சதவீதம் குறைந்து 10,788ஆக உள்ளது.
ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்டு மகேந்திரா மற்றும் ஆக்சிஸ் ஆகியவற்றின் பங்குகள் மதிப்பு இன்று குறைந்து காணப்பட்டது. இவற்றின் பங்குகள் மட்டும் இன்று 3.28சதவீதம் குறைந்திருந்தது. நிப்டியில் பொதுத்துறை மற்றும் வங்கிகளின் பங்குகள் மதிப்பு குறைந்து காணப்பட்டது.
வரலாற்றிலேயே முதன் முறையாக மோட்டார் நிறுவனங்களின் செயல்பாடு மோசமாக இருப்பதாலும் இந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு குறைவதற்கு காரணமாக உள்ளது.
சீனாவின் பல்வேறு பொருட்களின் மீது அமெரிக்கா 5 சதவீத வரிகளை விதித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க கச்சா எண்ணெய் மீது புதிய வரியை விதித்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டு இது இந்திய பங்கு வர்த்தகத்தின் மீதும் பிரதிபலித்துள்ளது.
Sensex dives, Sensex today, Nifty today, Nifty ends below 10,800, நிப்டி, சென்செக்ஸ்,
ஆட்டோ மற்றும் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளை பெரிய அளவில் இன்று முதலீட்டாளர்கள் விற்றதால், சென்செக்ஸ் இன்று மட்டும் 760 புள்ளிகள் குறைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் நடந்து வருவதும் இன்றைய பங்குச் சந்தையில் எதிரொலித்து இருப்பதும் சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், ஜிடிபி குறைந்து இருப்பது, முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் இன்று மட்டும் 2.17 சதவீதம் குறைந்து, 36,521ஆக உள்ளது. இதேபோல் நிப்டியும், 235புள்ளிகள் குறைந்து, அதாவது 2.13 சதவீதம் குறைந்து 10,788ஆக உள்ளது.
ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்டு மகேந்திரா மற்றும் ஆக்சிஸ் ஆகியவற்றின் பங்குகள் மதிப்பு இன்று குறைந்து காணப்பட்டது. இவற்றின் பங்குகள் மட்டும் இன்று 3.28சதவீதம் குறைந்திருந்தது. நிப்டியில் பொதுத்துறை மற்றும் வங்கிகளின் பங்குகள் மதிப்பு குறைந்து காணப்பட்டது.
வரலாற்றிலேயே முதன் முறையாக மோட்டார் நிறுவனங்களின் செயல்பாடு மோசமாக இருப்பதாலும் இந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு குறைவதற்கு காரணமாக உள்ளது.
சீனாவின் பல்வேறு பொருட்களின் மீது அமெரிக்கா 5 சதவீத வரிகளை விதித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க கச்சா எண்ணெய் மீது புதிய வரியை விதித்துள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டு இது இந்திய பங்கு வர்த்தகத்தின் மீதும் பிரதிபலித்துள்ளது.