ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் 1.33% உயர்வு

ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், திங்கள்கிழமை முடிவடைந்த பங்கு வர்த்தகத்தை, இந்திய சந்தைகள் உயர்வுடன் முடித்தன.

TNN 21 Mar 2016, 5:40 pm
ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், திங்கள்கிழமை முடிவடைந்த பங்கு வர்த்தகத்தை, இந்திய சந்தைகள் உயர்வுடன் முடித்தன.
Samayam Tamil sensex rallies 333 points nifty50 reclaims 7700
பங்குச்சந்தைகளில் 1.33% உயர்வு


முந்தைய நாள் முடிவடைந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்திருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் கலந்திருந்தது.

உள்நாட்டில், நகை வர்த்தகர்களின் கடையடைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிறுரக சேமிப்புகள் மீதான வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாகக் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஆலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ஏப்ரல் மாதம் வெளியாகும் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கையில், வட்டிவிகிதம் குறைக்கப்படலாம் என, தகவல் வெளியானது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால், வர்த்தகம் தொடக்கம் முதலாகவே, பங்குச்சந்தைகளில் கிடுகிடு ஏற்றம் காணப்பட்டது. வங்கி,சிமெண்ட்,ரியல் எஸ்டேட் துறை பங்குகள் விலை உயர்வால், சந்தைகளின் உயர்வு, வர்த்தகம் முடியும் வரை நீடித்தது.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்ந்து, 25,285 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 7,704 ஆக முடிந்தது. இது 1.33% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்