ஆப்நகரம்

உயர்வுடன் நிறைவடைந்தன இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.

TNN 22 Jul 2016, 6:32 pm
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.
Samayam Tamil sensex rebounds 93 pts ends flat for week
உயர்வுடன் நிறைவடைந்தன இந்திய பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து, 27,764 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து, 8,525 புள்ளிகளாக இருந்தது. கெயில், பவர் கிரிட், ஏஷியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது.

ஆசிய பங்குச்சந்தைகளான சீனா, ஹாங்காங், ஜப்பான் ஆகியவை சரிந்து வர்த்தகமானது. இந்நிலையில் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து, 27,803 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளிகள் அதிகரித்து, 8,541 புள்ளிகளில் முடிவடைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்