ஆப்நகரம்

நிஃப்டி புள்ளிகள் முதல்முறையாக 9,400 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு, இன்றைய வர்த்தகத்தை முடித்துள்ளன.

TNN 10 May 2017, 4:49 pm
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு, இன்றைய வர்த்தகத்தை முடித்துள்ளன.
Samayam Tamil sensex rises by 314 points nifty hits 9400 for the first time ever
நிஃப்டி புள்ளிகள் முதல்முறையாக 9,400 புள்ளிகளுக்கு மேல் உயர்வு


வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 315 புள்ளிகள் அதிகரித்து, 30,248 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து, 9,407 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி புள்ளிகள் 9,400க்கு மேலே முடிவது இதுவே முதல்முறையாகும்.

வர்த்தக தொடக்கத்தில் இருந்தே, பங்குச்சந்தைகளில் முதலீடு உயர்ந்து காணப்பட்டது. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும் என்று, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு தெரிவித்தது.

இதனால், விவசாயம் செழித்து, இதர உற்பத்தித் துறைகளும் வளர்ச்சியை எட்டும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டதால், முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் மருந்துத் துறை பங்குகள் அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன.

இதேபோன்று, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்திருந்தன. தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், அரபிந்தோ ஃபார்மா, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன. அதேசமயம், விப்ரோ, டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் விலை சரிந்தும் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,607 பங்குகள் விலை உயர்ந்தும், 1,188 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

Bullish momentum on the indices continued in the last trading hour as well, with the Nifty clocking an all-time high and a fresh milestone of 9400.

அடுத்த செய்தி

டிரெண்டிங்