ஆப்நகரம்

சென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்?

தொடர்ந்து இறங்கி வந்த சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் மட்டும் 500 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

Samayam Tamil 10 Oct 2018, 6:05 pm
ரிசர்வ் வங்கி அரசு கடன் பத்திரங்களின் மீது நாளை ரூ. 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதுவும் சென்செக்ஸ் உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
Samayam Tamil சென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்?
சென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்?


இந்தியப் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சீனா, அமெரிக்க வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வர்த்தத்தின் ஊடே 2.14 மணியளவில் 494 புள்ளிகள் அதிகரித்து 34,793.66ஆக இருந்தது. 50 பங்குகள் கொண்ட நிப்டியின் புள்ளிகள் 1.50 சதவீதம் அதிகரித்து 10,450 ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் மட்டும் 200 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

இன்று ஆட்டோ, மெட்டல்ஸ், வங்கி பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளின் மதிப்பு 3 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. நிப்டியில் ஐடி பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.16 காசுகளாக குறைந்து காணப்பட்டது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டில் ஈடுபட்டனர்.

ரிசர்வ் வங்கி அரசு கடன் பத்திரங்களின் மீது நாளை ரூ. 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலமும் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதுவும் இன்றைய சென்செக்ஸ் உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் ரூ. 1,526 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். அதேசமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1,242 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்