ஆப்நகரம்

கடந்த 4 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் பங்குச்சந்தை நிறைவு!

கடந்த 4 மாதங்களின் அதிகபட்ச மதிப்பில், இந்திய பங்குச்சந்தைப் புள்ளிகள் நிறைவடைந்துள்ளன.

TNN 2 Feb 2017, 6:59 pm
கடந்த 4 மாதங்களின் அதிகபட்ச மதிப்பில், இந்திய பங்குச்சந்தைப் புள்ளிகள் நிறைவடைந்துள்ளன.
Samayam Tamil sensex scores for 2nd day as budget rally continues
கடந்த 4 மாதத்தின் அதிகபட்ச புள்ளிகளில் பங்குச்சந்தை நிறைவு!


நேற்று 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அந்நிய முதலீட்டாளர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லாத அம்சங்களை அதிகம் கொண்டுள்ள இந்த பட்ஜெட்டுக்கு, பல்வேறு தரப்பிலும் வரவேற்பு காணப்படுகிறது.

இதையொட்டி, நேற்று முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள், அதிகபட்ச உயர்வை சந்தித்திருந்தன. இதன் தாக்கம் இன்றைய பங்குச்சந்தைகளிலும் தொடர்ந்தது. இதனால், 2வது நாளாகவும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன. குறிப்பாக, சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடந்த 4 மாதங்களின் அதிகபட்ச மதிப்பை தொட்டுள்ளன.

வாகனம், மூலதனச் சாதனம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைசார்ந்த பங்குகள் தவிர, எஞ்சிய அனைத்துத் துறை பங்குகளும் விலை உயர்ந்து முடிந்தன. தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, சன் ஃபார்மா, ரெட்டீஸ் லேப் போன்ற பங்குகள் அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 85 புள்ளிகள் உயர்ந்து, 28,227 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து, 8,734 புள்ளிகளாக முடிந்தது.

Sensex scores for 2nd day as Budget rally continues.

அடுத்த செய்தி

டிரெண்டிங்