ஆப்நகரம்

இன்று ஒரு நாள் மட்டும் 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!

சென்செக்ஸ் இன்று மட்டும் 500 புள்ளிகள் குறைந்து 33,176 புள்ளிகளாகவும், நிப்டி 1.50 சதவீதம் குறைந்து 10,200 புள்ளிகளாகவும் முடிந்தது.

Samayam Tamil 16 Mar 2018, 6:26 pm
சென்செக்ஸ் இன்று மட்டும் 500 புள்ளிகள் குறைந்து 33,176 புள்ளிகளாகவும், நிப்டி 1.50 சதவீதம் குறைந்து 10,200 புள்ளிகளாகவும் முடிந்தது.
Samayam Tamil sensex sinks over 500 points amid political upheaval trade war woes
இன்று ஒரு நாள் மட்டும் 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!


நடப்பு வாரத்தின் துவக்கத்தில் உயர்ந்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று தேசிய அளவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து சரிந்தது. மத்திய அரசின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி இன்று அதிகாரபூர்வமாக விலகியது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கடிதம் கொடுத்தது. இதை ஆதரிப்போம் என்று காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தெரிவித்தன. இதன் பாதிப்பு இன்றைய மும்பை பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது.

இதுமட்டுமின்றி அமெரிக்காவில் ஏற்றுமதி, இறக்குமதிகள் மீதான வரி விதிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெட்டல் மற்றும் அலுமினியத்தின் மீதான வரியை அதிகரித்தார். இதனால் இன்றைய இந்தியப் பங்குச் சந்தையில் மெட்டல் மற்றும் அலுமினியம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 2 சதவீதம் குறைந்தது.

டாடா மோட்டார்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா ஆகியவற்றின் பங்குகள் இன்று சரிந்தே காணப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்