ஆப்நகரம்

உயர்வுடன் வர்த்தகமாகும் இந்தியப் பங்குச்சந்தைகள்

வார வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வார்த்தகமாகி வருகின்றன.

TNN 30 Aug 2016, 11:16 am
மும்பை: வார வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வார்த்தகமாகி வருகின்றன.
Samayam Tamil sensex soars 200 pts and nifty marches 8700
உயர்வுடன் வர்த்தகமாகும் இந்தியப் பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 176 புள்ளிகள் உயர்ந்து 28,079 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 51 புள்ளிகள் அதிகரித்து, 8,658 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆட்டோ, எண்ணெய் எரிவாயு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளின் விலை 0.95% வரை அதிகரித்து காணப்பட்டன. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டுக் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.

தற்போது சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்ந்து, 28,103 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து, 8,670 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்