ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வாய்ப்பில்லை என்ற தகவல் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.

TNN 23 Jun 2016, 5:04 pm
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வாய்ப்பில்லை என்ற தகவல் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
Samayam Tamil sensex soars 237 points ahead of brexit poll outcome european cues lend support
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வு


கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளின் உயர்வைத் தொடர்ந்து, மீண்டும் ஏற்றம் கண்டன. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா, இல்லையா என்ற நோக்கில், அந்நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

எனினும், பிரிட்டன் வெளியேற வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால், நம்பிக்கை அடைந்த முதலீட்டாளர்கள், பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கவே, அவற்றின் விலையும் உயர்ந்தது.

ஐடி, தொலைத்தொடர்பு, மருந்து, மூலதனச் சாதனம், வாகனம் மற்றும் உலோகத் துறை பங்குகள் அதிகளவில் விலை உயர்வை சந்தித்தன. தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், கெயில் இந்தியா, ரெட்டீஸ் லேப், என்டிபிசி, டெக் மஹிந்திரா, டிசிஎஸ் போன்ற பங்குகள் அதிகபட்சமாக விலை அதிகரித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்வுடன் 27,002 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து, 8,270 புள்ளிகளாக முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்