ஆப்நகரம்

354 புள்ளிகள் சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்; 11,600 புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி!

இன்றைய பங்குச்சந்தையின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு பெற்றுள்ளது.

Samayam Tamil 10 Apr 2019, 4:40 pm
நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒருகட்டத்தில் 25 காசுகள் அதிகரித்து, 69.41ஆக உயர்ந்தது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.
Samayam Tamil Sensex


வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று, சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிந்து 38,585 புள்ளிகளில் முடிவுற்றது. பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் மிகப்பெரும் சரிவைச் சந்தித்தன.

அதேபோல் டாடா மோட்டார்ஸ் பெரும் லாபம் ஈட்டியது. மேலும் ஹெச்.டி.எஃப்.சி டுயோ, டிசிஎஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் ஆகியவற்றின் இண்டக்ஸ் சரிந்தன. இன்றைய பங்கு வர்த்தகத்தில் கலந்து கொண்ட 2,711 நிறுவனங்களில், 1,392 பங்குகள் சரிவையும், 1,144 பங்குகள் ஏற்றத்தையும் கண்டன.

175 பங்குகள் எந்தவித மாற்றமும் காணவில்லை. இன்றைய வர்த்தகத்திற்கு இடையே சென்செக்ஸ் அதிகபட்சமாக 38,978.99 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,598.72 புள்ளிகளுக்கும் சென்றன.

நிப்ஃடி 50 இண்டக்ஸ் என்.எஸ்.சி 88 புள்ளிகள் குறைந்து, 11,600 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்