ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் 2% சரிவு

வியாழக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் 2% சரிவுடன் முடிந்துள்ளன.

TNN 28 Apr 2016, 4:01 pm
வியாழக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் 2% சரிவுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil sensex tanks 458 points as boj disappoints fo expiry dampens sentiment
பங்குச்சந்தைகளில் 2% சரிவு


ஜப்பான் நாட்டு மத்திய வங்கி, இனி வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை என, தெரிவித்தது. இதனால், ஆசிய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதில், சர்வதேச முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர். உள்நாட்டிலும், ஏப்ரல் மாதத்திற்கான முன்பேர வர்த்தக் கணக்கை நேர் செய்யும் நாள் என்பதால், பங்குகளை விற்று, முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தனர். இதனால், சந்தைகளில் கிடுகிடு சரிவு ஏற்பட்டது.

ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், வங்கி, வாகனம் உள்ளிட்ட அனைத்துத் துறை பங்குகளும் விலை குறைந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 461 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 25,603 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 133 புள்ளிகள் சரிவுடன், 7,847 ஆக முடிவடைந்தது. இது 2% சரிவாகும்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்