ஆப்நகரம்

உயர்வுடன் தொடங்கின பங்குச்சந்தைகள்

வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கின.

TNN 12 Jul 2016, 11:58 am
மும்பை: வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கின.
Samayam Tamil sensex up today
உயர்வுடன் தொடங்கின பங்குச்சந்தைகள்


உலக சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்வாலும் நேற்றைய வர்த்தகம் அதிக உயர்வுடன் இருந்தது. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 500 புள்ளிகளும், நிஃப்டி 150 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்து, 27,720 புள்ளிகளில் வர்த்தகமானது.

இதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 25 புள்ளிகள் உயர்ந்து, 8,493 புள்ளிகளில் வர்த்தகமானது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிதளவு ஏற்றம் கண்டு, ரூ.67.17 என்ற அளவில் காணப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, மாருதி, ஓ.என்.ஜி.சி ஆகியவற்றின் பங்குகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. மேலும் பெல் நிறுவனம், கோல் இந்தியா, ரெட்டி, சன் ஷர்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் நஷ்டத்தில் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்