ஆப்நகரம்

இந்திய பங்குச்சந்தைகள் 1.5% உயர்வு

புதன்கிழமை முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் 1.5% உயர்வுடன் இருந்தன.

ET Now 30 Mar 2016, 8:44 pm
புதன்கிழமை முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் 1.5% உயர்வுடன் இருந்தன.
Samayam Tamil sensex vaults 438 points on federal bank comments
இந்திய பங்குச்சந்தைகள் 1.5% உயர்வு


உள்நாட்டில், ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கையில், வட்டிவிகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே காணப்படுகிறது.

இதற்கேற்ப, உள்நாட்டில் ஆலை உற்பத்திப் பணிகள் மந்தமடைந்துள்ளன. இதனால், வட்டிவிகிதம் குறைக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாக, புதன்கிழமை தொடங்கிய பங்குச்சந்தைகளில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது. மேலும், வட்டிவிகிதத்தை உயர்த்துவதில் எந்த அவசரமும் காட்டப்படாது என்று, அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஜானட் யெல்லன் உறுதி அளித்தார். இதுவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

வங்கி, உலோகம், அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் துறை பங்குகள் அதிகபட்ச விலை உயர்வை சந்தித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 438 புள்ளிகள் அதிகரித்து, 25,338 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 138 புள்ளிகள் உயர்வடைந்து, 7,735 புள்ளிகளாக நிலைபெற்றது. இது 1.5% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்