ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் 2% உயர்வு

புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் கடந்த 3 மாதத்தின் அதிகபட்ச அளவுக்கு உயர்ந்தன.

TNN 13 Apr 2016, 6:07 pm
புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் கடந்த 3 மாதத்தின் அதிகபட்ச அளவுக்கு உயர்ந்தன.
Samayam Tamil sensex zooms to over 3month high of 25627 on positive economic data
பங்குச்சந்தைகள் 2% உயர்வு


ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. பிற்பகலில் தொடங்கிய ஐரோப்பிய சந்தைகளிலும் ஏற்றம் இருந்தது. உள்நாட்டிலும், தென்மேற்கு பருவமழை சீசன் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதோடு, ரிசர்வ் வங்கியும் வட்டிவிகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதால், முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் காட்டியதால், சந்தைகள் உயர்ந்தன.

வங்கி, உலோகம் உள்பட அனைத்துத்துறை பங்குகளும் விலை அதிகரித்தன. வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 481 புள்ளிகள் அதிகரித்து, 25,627 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 141 புள்ளிகள் உயர்ந்து, 7,850 ஆக முடிவடைந்தது. இது 2% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்