ஆப்நகரம்

எள், தேங்காய் பருப்பு விற்பனை ஜோர்.. ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டத்தில் எள் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஏலத்தில் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Jul 2022, 11:14 am
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 494 எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 105 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 121 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 107 ரூபாய் 19 காசுக்கும் விற்பனையானது.
Samayam Tamil erode


அதேபோல, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 124 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 106 ரூபாய் 39 காசுக்கும்,
வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 111 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 117 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 111 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது.

மொத்தம் 34,876 கிலோ எடையுள்ள எள் 40 லட்சத்து 67 ஆயிரத்து 853 ரூபாய்க்கு விற்பனையானது.

cotton price: பருத்தி விவசாயிகள் வேதனை.. மிகப் பெரிய நஷ்டம்!
தேங்காய் பருப்பு ஏலம்:

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. மொத்தம் 260 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 85 ரூபாய் 16 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் விலைபோனது.

அதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 66 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 29 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 9 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 12,741 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 10 லட்சத்து 21 ஆயிரத்து 839 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்