ஆப்நகரம்

RBI Governor 2018: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கியின் 25வது புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 Dec 2018, 6:54 pm
நிதிக்குழு உறுப்பினராக இருந்து வரும் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil ஆர்.பி.ஐ ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்


இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து வந்த உர்ஜித் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதிவியை ராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து இன்று ஒடிசாவை சேர்ந்த, சக்திகாந்த தாஸ் (63) ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கபப்ட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவியை வகிப்பார்.

பல ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சக்திகாந்த தாஸ் (63), தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் நிதியமைச்சகத்தின் முன்னாள் செயலாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

தற்போது நிதிக்குழு உறுப்பினராக இருந்து வரும் சக்திகாந்த தாஸ், இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக நியிமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்