ஆப்நகரம்

Share Market: பல்டி அடித்த பங்குகள்... நடந்த கதையை நீங்களே பாருங்க!

இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2020, 9:47 am

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 149.08 புள்ளிகள் உயர்ந்து 37,088.68ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 74.20 புள்ளிகள் உயர்ந்து 10,965.80ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 1.28% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக மாருதி சுஸுகி 1.10% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இண்டஸ் இண்ட் பேங்க் பங்கு விலை 1.34% சரிந்துள்ளது. அடுத்தபடியாக பவர் கிரிட் 1.12%, அல்ட்ராடெக் சிமெண்ட் 0.59% சரிந்துள்ளன.

இந்த வாரம் பங்குச் சந்தையை இதுதான் தீர்மானிக்கும்!

நிஃப்டியில் அதிகபட்சமாக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் பங்கு விலை 2.22% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக ஹீரோ மோட்டோகார்ட்ப் 1.54%, பார்தி இன்ஃப்ராடெல் 1.45%, பஜாஜ் ஆட்டோ 1.33%, அதானி போர்ட்ஸ் 1.25%, யூபிஎல் 1.24%, சன் பார்மா 1.23%, மாருதி சுஸுகி 1.21% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக பவர் கிரிட் 1.18% சரிந்துள்ளது. அடுத்தபடியாக இண்டஸ் இண்ட் பேங்க் 0.71%, ஹெச்சிஎல் டெக் 0.59%, டெக் மகிந்த்ரா 0.45%, கெயில் இந்தியா 0.43% சரிந்துள்ளன.

நீண்ட தொய்வுக்கு பிறகு ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் பங்கு தற்போது முன்னேற்றப் பாதையில் நகர்ந்து வருகிறது. வாகன துறை சார்ந்த பங்குகள் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.06 சரிந்து ரூ.75.39ஆக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்