ஆப்நகரம்

சரிவுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.

TNN 10 Aug 2016, 4:56 pm
மும்பை: இன்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
Samayam Tamil share markets ends with down today
சரிவுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்து, 28,127 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8 புள்ளிகள் அதிகரித்து, 8,686 புள்ளிகளில் வர்த்தகமானது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையால் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க பங்குச் சந்தை அதிக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இதன் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகளும் எழுச்சியுடன் வர்த்தகமாகின.

வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 310 புள்ளிகள் குறைந்து, 27,774 என்ற நிலையில் வர்த்தகமானது. இதேபோல் நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து, 8,575 என்ற நிலையில் வர்த்தகமானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்