ஆப்நகரம்

இனி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்... அதிரடி விலை உயர்வு!

ஐந்தாவது முறையாக விலையேற்றம்!

Samayam Tamil 17 Apr 2021, 2:21 pm
அனைத்து கார்களின் விலையும் 23,000 ரூபாய் வரையில் உயர்த்தப்படுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil shock news to car buyers maruti suzuki car price hike again
இனி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்... அதிரடி விலை உயர்வு!


கொரோனாவால் வந்த வினை!

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறையில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் கார்களின் விலை 45,000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதோடு நின்றுவிடாமல், 2021 நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் கார்களின் விலையை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உயர்த்தி அதிர்ச்சியளித்தன.

மாருதிக்கு வந்த சோதனை!

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார்களைத் தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் மந்தநிலையால் மற்ற நிறுவனங்களைப் போலவே மாருதி சுஸுகி நிறுவனமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

5ஆவது முறையாக விலை உயர்வு!

2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டு முறை உயர்த்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலும் கார்களின் விலையை உயர்த்தி அதிர்ச்சியளித்தது. பின்னர் ஜனவரி மாதம் 18ஆம் தேதி மீண்டும் விலை உயர்வை அறிவித்த மாருதி சுஸுகி, கார்களின் விலையை 34,000 ரூபாய் வரையில் உயர்த்துவதாக அறிவித்தது. டிசம்பர் மாதம் வெளியான அறிவிப்பில் 4.7 சதவீதம் வரையில் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. பின்னர், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் கார்களின் விலை உயர்த்தியது. இந்நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஷாக்!

மாருதி சுஸுகி நிறுவனம் கிட்டத்தட்ட தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. கார்களின் விலை ரூ.22,500 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் செலெரியோ ஆகிய கார்களின் விலை மட்டும் தற்போது உயர்த்தப்படவில்லை. விரைவில் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு 1.6 சதவீதம் வரையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வந்தபிறகு மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில் மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்துவது மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்