ஆப்நகரம்

இனி கார் வாங்குறது ரொம்ப கஷ்டம்... டொயோடா அதிரடி அறிவிப்பு!

அக்டோபர் 1 முதல் கார் விலையை உயர்த்தப் போவதாக டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Sep 2021, 3:38 pm
தசரா, தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய பண்டிகை சீசனில் வழக்கமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். இதற்காகவே பலர் காத்திருப்பார்கள். குறைந்த விலையில் கார், பைக் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டில் அவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. டொயோடா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி அக்டோபர் 1 முதல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.
Samayam Tamil car


சென்ற ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த முறை கார்களின் விலை 2 சதவீதம் வரையில் உயர்த்தப்படுகிறது. எந்தெந்த மாடல் எவ்வளவு விலை உயரப் போகிறது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. மாடல்களைப் பொறுத்து வெவ்வேறு அளவில் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்க ஆசையா? இதோ சூப்பர் வாய்ப்பு! பண்டிகைக் கால சலுகை!
டொயோடா நிறுவனம் மட்டும் கார்களின் விலையை உயர்த்தவில்லை; சமீபத்தில்தான் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தியிருந்தன. உற்பத்திச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை ஈடுகட்டுவதற்கு வேறு வழியில்லாமல் கார்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்துகின்றன. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு இந்த விலையேற்றம் சற்று பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்