ஆப்நகரம்

இந்த வேலையே வேண்டாம்! வெளியேறும் ஊழியர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த ஆண்டில் ஐந்தில் நான்கு இந்தியர்கள் தங்களது வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்வார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 18 Jan 2022, 4:55 pm
ஆன்லைன் வேலை தேடுதல் தளமான லிங்க்டு.இன் சார்பாக வேலை தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய வேலைச் சந்தையில் உள்ள பணியாளர்களில் சுமார் 82 சதவீதத்தினர் இந்த ஆண்டில் தங்களது வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படித்து முடித்து விட்டு உடனடியாக வேலைக்குச் சேரும் ஃபிரஷர்களின் எண்ணிக்கைதான் 94 சதவீதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil job


வேலையை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் வெவ்வேறாக உள்ளன. மிக முக்கியமான காரணமாக குடும்ப வாழ்க்கை உள்ளது. அதாவது, அலுவலகப் பணியையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் சரியாகக் கையாள முடியாத மன அழுத்தத்தால் சுமார் 30 சதவீத ஊழியர்கள் தங்களது வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்வார்கள் என இந்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த காரணமாக சம்பளம் உள்ளது. போதிய சம்பளம் இல்லை என சுமார் 28 சதவீதத்தினர் தங்களது வேலையை விட்டு வெளியேறுகின்றனர்.

கிரிப்டோகரன்சிகளில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!
எதிர்காலத்தில் நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக தற்போதைய வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்ல விரும்புவதாக 23 சதவீதத்தினர் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கொரோனா பிரச்சினை வந்த பிறகு ஊழியர்களின் மனநிலையில் நிறைய மாற்றம் வந்துள்ளது. நிறையப் பேர் தங்களது வேலையைத் தக்கவைத்துக்கொள்ள தங்களது திறனை பல மடங்கு உயர்த்திக்கொள்ள நினைக்கின்றனர்.

அதேபோல, ஒருசிலர் கொரோனா பிரச்சினைக்குப் பிறகு மனரீதியாக அலுவலகத்தில் பணிச் சுமையால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்