ஆப்நகரம்

கடைக்காரர்களுக்கு கடன்: ரூ.10 லட்சம் வரை வாங்கலாம்!

ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறும் வசதி உள்ளது.

Samayam Tamil 27 Jul 2021, 8:16 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் கடைக்காரர்களுக்கு தொடர்ந்து கடைகளை நடத்துவதற்கு நிதியில்லாமல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்புத் திட்டத்தை ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள் ரூ.10 லட்சம் வரையில் கடன் பெறலாம். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.
Samayam Tamil loan


தூகாந்தார் ஓவர்டிராஃப்ட் ஸ்கீம் என்ற இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.50,000 கடன் வழங்கப்படும். இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆறு மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் விவரங்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த வங்கியின் ஸ்டேட்மெண்டாகவும் அது இருக்கலாம். வீட்டுக் கடன், நகைக் கடன் போல உத்தரவாதத்திற்கு வேறு எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை. இந்தக் கடனுக்கான பேப்பர் வொர்க்செயல்பாட்டுப் பணியும் விரைவில் முடிக்கப்படுகிறது.

ஏடிஎம், சம்பளம், பென்சன்: ஆகஸ்ட் முதல் எல்லாம் மாறுது!

ஆறு மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மெண்ட் வழங்கும் வங்கியில் 15 மாதங்களுக்கு வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதிமுறையாகும். கடைக்கு சொந்தக்காரர் மற்றும் பார்ட்னர்கள் பெயரில் மட்டுமே கடன் வழங்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்