ஆப்நகரம்

ஒரே ஒரு கிளிக்தான்.. சோலி முடிஞ்சிரும்.. வங்கிக் கணக்கில் மெகா கொள்ளை.. தப்பிக்க என்ன வழி?

வங்கிக் கணக்கு விஷயத்தில் நீங்கள் செய்யும் சிறு தவறால் உங்களுடைய கணக்கில் உள்ள பணம் அனைத்தும் நொடிப் பொழுதில் காணாமல் போய்விடும். அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 6 Mar 2023, 3:29 pm
இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதால் டிஜிட்டல் மயமாக்கத்தில் இந்தியா வேகமாக நகர்கிறது. இப்போது அதிகப் பேர் வீட்டில் அமர்ந்து வேலை செய்கிறார்கள். உணவை ஆர்டர் செய்வது முதல் மருந்து ஆர்டர் செய்வது வரை ஒரே கிளிக்கில் பல வேலைகளை நொடிப் பொழுதில் முடித்துவிடலாம். ஒரே கிளிக்கில் பல ஆயிரம் ரூபாய்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடிகிறது. ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பிய ஆடை அணிகலன்கள் உங்கள் வீடு தேடி வரும். ஆனால் இந்த ஒரு கிளிக் உங்களை பெரிய சிக்கலில் தள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் (HDFC Bank) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தில் மிக முக்கியமான செய்தி வந்துள்ளது.
Samayam Tamil bank frauds


என்ன பிரச்சினை?


உலகம் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கும் வேகத்தை நம்மால் பார்க்க முடிகிறது. அதே வேகத்தில் மோசடி செய்பவர்களும் முன்னேறி வருகின்றனர். புதிது புதிதாக தொழில்நுட்பங்களையும் யுத்திகளையும் கண்டுபிடித்து ஏமாற்றுகின்றனர். சமீபத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் கணக்கு வைத்திருப்பவர்களிடம் இருந்து புகார் ஒன்று வந்தது. முதலில், அவர்களின் தொலைபேசியில் ஒரு செய்தி வருகிறது. அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் KYC மற்றும் PAN நம்பரை புதுப்பிக்கும்படி கேட்கப்படுகிறார்கள். அதே செய்தியில் ஒரு இணைப்பும் (Link) கொடுக்கப்பட்டுள்ளது.

"அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் HDFC கணக்கு இன்று மூடப்பட்டு விடும். தயவுசெய்து உங்கள் KYC சரிபார்ப்பை உடனடியாக முடிக்கவும். அதற்கு இங்கே கிளிக் செய்யவும்" என்று வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் வந்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் ட்வீட் மூலம் ஹெச்டிஎஃப்சி வங்கியிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, அத்தகைய செய்தி எதுவும் வங்கியால் அனுப்பப்படவில்லை என்று அவ்வங்கி பதிலளித்தது. யாருக்காவது இதுபோன்ற செய்தி வந்தால், தவறுதலாகக் கூட அதைக் கிளிக் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளத்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

மோசடியைத் தவிர்ப்பது எப்படி?


இந்த வகையான மோசடியைத் தவிர்க்க உங்கள் ஏடிஎம் PIN நம்பர், CVV நம்பர் மற்றும் கணக்கு தொடர்பான எந்தத் தகவலையும் வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதேபோல, UPI கடவுச்சொல்லை உருவாக்கும் போது, அதை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும். ஏதேனும் மோசடி நடைபெறுவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக வங்கிக் கிளையை அழைத்து புகார் கொடுக்க வேண்டும்.

உங்களுடைய CVV நம்பர், PIN, கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றை மெசேஜ் மூலம் வங்கி ஒருபோதும் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி மெசேஜ் வந்தாலோ அல்லது அழைப்பு வந்தாலோ அதற்கு பதிலளிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கியும் பல்வேறு முறை எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்