ஆப்நகரம்

​ ஸ்மாா்ட் காா்டு இல்லதவா்களுக்கு ஜன. 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது

ஜனவாி 1ம் தேதி முதல் ஸ்மாா்ட் காா்டு இல்லாதவா்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது என்று பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 8 Dec 2017, 9:25 am
ஜனவாி 1ம் தேதி முதல் ஸ்மாா்ட் காா்டு இல்லாதவா்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது என்று பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil smart card must from january 1
​ ஸ்மாா்ட் காா்டு இல்லதவா்களுக்கு ஜன. 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது


தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் நடைபெறக்கூடிய குளறுபடிகள், முறைகேடுகளை தவிா்க்கும் விதமாக ஸ்மாா்ட் ரேஷன் காா்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போது வரை தமிழகம் முழுவதும் 60 சதவீத மக்களுக்கு ஸ்மாா்ட் ரேஷன் காா்டு வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகைகளின் புகைப்படம், முகவாியில் குளறுபடி உள்ளிட்ட பிரச்சினைகளால் 40 சதவீத மக்களுக்கு இன்னும் ஸ்மாா்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற 30ம் தேதிக்குள் ஸ்மாா்ட் ரேஷன் காா்ட்டுகளை வழங்கி முடிக்க வேண்டும் என்று அதிகாாிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து வருகிற ஜன.1ம் தேதி முதல் புதிய ஸ்மாா்ட் காா்டுகளை வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், பழைய ரேஷன் காா்டுகளை வைத்திருப்பவா்களுக்கு பொருட்கள் வழங்கப்படக் கூடாது என்றும் பொது விநியோகத் துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்