ஆப்நகரம்

ஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா!

கொரோனா பாதிப்பால் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Samayam Tamil 12 May 2021, 5:59 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவானது. இதனால் பொழுதுபோக்குக்கு ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தினர். ஆனால், வேலையும் சம்பளமும் இல்லாமல் போனதால் ஸ்மார்ட்போன் விற்பனை மந்தமாகவே இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ஆண்டின் இறுதியில் ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடித்தது. குறிப்பாக அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் அதிகளவு ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின.
Samayam Tamil smartphone sales


ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியதால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பலர் வேலையையும் சம்பளத்தையும் இழந்துள்ளனர். இதனால் ஸ்மார்ட்போன் விற்பனையும் மந்தமாகியுள்ளது. சர்வதேச டேட்டா கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவில் மொத்தம் 3.8 கோடி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 சதவீத வளர்ச்சியாகும்.

50 ரூபாயை வைத்து நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

ஆனால், 2020 அக்டோபர் - டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிட்டால் 14 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நடப்பு ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும் ஸ்மார்ட்போன் விற்பனையில் வீழ்ச்சி நீடிக்கும் என்று IDC நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான நவ்கேந்தர் சிங் கூறியுள்ளார். ஸ்மார்ட்போன் விற்பனையைப் பொறுத்தவரையில், ஆப்பிள், சாம்சங், ஒன் பிளஸ் ஆகிய மாடல்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய போன்களும் ஒட்டுமொத்த ஸ்மாட்போன் விற்பனையில் 28 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளன. கேலக்ஸி எஸ்21 மற்றும் ஒன் பிளஸ் 9 போன்களும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்