ஆப்நகரம்

சாஃப்ட்பேங்க் நிறுவனத்துக்கு கடினமான காலம்! கொரோனா செய்த வேலை!

சர்வதேச முதலீட்டு நிறுவனமான சாஃப்ட்பேங்குக்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 6:59 pm
கடந்த ஆறு - ஏழு மாதங்களாகவே சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் சர்வதேச முதலீட்டாளர்களும் மற்ற நாடுகளில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுவதோடு, பங்குச் சந்தை கடன் சந்தைகளில் உள்ள தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றன. இதுபோன்ற சூழலில் சர்வதேச முதலீட்டு நிறுவனமான சாஃப்ட்பேங்க் கொரோனாவால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Samayam Tamil softbank


இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் குரூப் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இந்நிறுவனம் முதலீடு செய்யாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு உணவு முதல் தொழில்நுட்பம் வரையில் அனைத்துத் துறைகளிலும் வெற்றிகரமாக முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா விளைவாக சாஃப்ட்பேங்க் முதலீடு செய்துள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குக் கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதால் சாஃப்ட்பேங்க் நிறுவனத்துக்கு 18 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பாதாளத்தை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!

இந்த ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 88 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 69.9 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது. இதில் டாக்ஸி போக்குவரத்து நிறுவனமான உபேர் மற்றும் ஆபீஸ் ஸ்பேஸ் நிறுவனமான வீவொர்க் ஆகியவற்றின் முதலீடுகளில் மட்டும் 10 பில்லியன் டாலர் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் சாஃப்ட்பேங்க் நிறுவனத்துக்கு 13 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் மட்டுமே இதற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 7.5 பில்லியன் டாலர் ஆகும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகம்... ஐடி ஊழியர்களுக்கு என்ன பயன்?

இந்நிறுவனத்துக்கு இழப்புகள் அதிகரித்து வருவதால் அதன் சொத்துகளையும், பெரிய நிறுவனங்களில் வைத்துள்ள பங்குகளையும் விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்படி., சீனாவைச் சேர்ந்த அலிபாபா குரூப் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்