ஆப்நகரம்

சித்ராவுக்கு மேலும் நெருக்கடி.. சிபிஐ விசிட்டால் டென்ஷன்!

சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு தொடர்பாக செபி அலுவலகத்தில் இருந்து சிபிஐ ஆவணங்களை வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Feb 2022, 6:08 pm
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் செபி அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் விசிட் அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil chitra ramakrishna


தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தை தொடர்பான மிக ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டதாக பிப்ரவரி 11ஆம் தேதி செபி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது.

ஆட்டையை போடும் மோசடி கும்பல்.. தேசிய பங்குச் சந்தை எச்சரிக்கை!
அமலாக்கத்துறை விசாரணை வளையத்திலும் சித்ரா சிக்குவார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று செபி அலுவலகத்துக்கு சென்று சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சித்ரா ராமகிருஷ்ணா செய்த முறைகேடுகள் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாகக் குழுவிற்கு தெரிந்தே நடந்துள்ளதாக செபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்