ஆப்நகரம்

தென் ஆப்ரிக்க தேர்தலுக்கு செல்லும் நம்ம 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்!! எப்படின்னு படிங்க!!

தென் ஆப்ரிக்காவில் 2019ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 நோட்டுக்கள் பெரிய அளவில் பங்கு வகிக்க உள்ளது.

TOI Contributor 9 Nov 2017, 3:09 pm
தென் ஆப்ரிக்காவில் 2019ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 நோட்டுக்கள் பெரிய அளவில் பங்கு வகிக்க உள்ளது.
Samayam Tamil south africa buys 750 tonnes of scrapped old notes to use them in 2019 polls heres how
தென் ஆப்ரிக்க தேர்தலுக்கு செல்லும் நம்ம 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்!! எப்படின்னு படிங்க!!


இந்தியாவில் இருந்து செல்லாத இந்த ரூபாய் நோட்டுக்களை ப்ளைவுட்களாக மற்றும் ஹார்டுபோர்டுகளாக மாற்றி தென் ஆப்ரிக்கா ஏற்றுமதி செய்ய உள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இந்திய ரிசர்வ் வங்கிக்கும், கேரளாவில் உள்ள வெஸ்டர்ன் இண்டியா ப்ளைவுட் என்ற நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்டுளள்து.

இந்த ஹார்டுபோர்டுகள் அனைத்தும் தென் ஆப்ரிக்க தேர்தலில் பதாகைகள் மற்றும் பேனர்களாக பயன்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து வெஸ்டர்ன் இண்டியா ப்ளைவுட் நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், ''பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் என்னை கேரள ரிசவ் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டார்கள். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை எவ்வாறு அழிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவற்றை எரித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படும் என்பதால், எங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை வேறு முறையில் இந்தப் பணத்தை பயன்படுத்த முடிவு செய்தனர். அதன் உருவாக்கம்தான் ஹார்டுபோர்டு.

இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி உதிர்த்து கொடுத்தது. அதை நாங்கள் மரக் கூழுடன் சேர்த்து ஹார்டுபோர்டு தயாரித்து வருகிறோம். இவற்றுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. தற்போது இந்திய பணமதிபிழப்பு ரூபாய் நோட்டுக்களால் தயாரிக்கப்படும் ஹார்டுபோர்டுகள் தென் ஆப்ரிக்க தேர்தலுக்கு செல்ல உள்ளது'' என்றார்.

இந்த கேரள நிறுவனத்துக்கு 50 டிரக்குகளில் 750 டன் ரூபாய் நோட்டுக்கள் வந்து குவிந்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்