ஆப்நகரம்

ரயில் பயணிகளுக்கு சிறப்பு வசதி.. இனி இவர்கள் சௌகரியமாக பயணிக்கலாம்!

மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் சிறப்பு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 13 Apr 2023, 4:35 pm
இந்திய ரயில்வேயால் பயணிகளுக்காக ஒரு பெரிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்தப் பலனை நீங்களும் பெறலாம். பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உடல் ஊனமுற்றோருக்கு தாழ்வான பெர்த் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன், உடல் ஊனமுற்றோருடன் பயணிக்கும் நபர்களுக்கும் தாழ்வான படுக்கைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil train


வயதானவர்களுக்கும் வசதி!

முதியோர் மற்றும் பெண்களுக்கான கீழ் பெர்த் வசதியையும் ரயில்வே தொடங்கியுள்ளது. இது குறித்து ரயில்வே பல்வேறு மண்டலங்களுக்கான உத்தரவுகளை மார்ச் 31ஆம் தேதி வெளியிட்டது. ஸ்லீப்பர் வகுப்பில் நான்கு இருக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு நடுத்தர இருக்கைகள்), 3ஆம் ஏசி பெட்டியில் இரண்டு இருக்கைகள் (ஒரு கீழ் மற்றும் ஒரு நடுத்தர இருக்கை), மூன்றாம் ஏசி (எகானமி) இரண்டு இருக்கைகள் (ஒரு கீழ் மற்றும் ஒரு நடுத்தர இருக்கை) பெட்டியில் இருக்கும். உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்காக இந்த சீட்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

முழு கட்டணமும் செலுத்த வேண்டும்!

கரிப் ரத் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கீழ் பெர்த் மற்றும் 2 மேல் இருக்கைகள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த வசதிக்காக இவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், 'ஏசி சேர் கார்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் வசதி!

ரயில்வேயில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஸ்லீப்பர் பிரிவில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 6 கீழ் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனுடன், 3ஆம் அடுக்கு ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த்களும், 2ஆம் அடுக்கு ஏசியில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று முதல் நான்கு கீழ் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே அமைச்சர் தகவல்!

மூத்த குடிமக்கள் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் பெர்த்தின் வசதியைப் பெறுவார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். ரயில்வேயில் இதற்கென தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் கீழ் பெர்த்திற்கு எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. இந்த பயணிகளுக்கு தானாக ரயில்வே தரப்பிலிருந்து இருந்து கீழ் பெர்த் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்