ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புதிய இன்சூரன்ஸ் திட்டம்!

பென்சனர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சலுகை!

Samayam Tamil 27 Jun 2022, 2:57 pm
மாநில அரசு ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil special insurance scheme for kerala govt employees pensioners and their dependents
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புதிய இன்சூரன்ஸ் திட்டம்!


இன்சூரன்ஸ் திட்டம்!

அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு காப்பீட்டுத் திட்டத்தை கேரள மாநில அரசு கொண்டுவந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதில் பயன்பெறலாம். இத்திட்டத்தின் பெயர் MEDSEP.

பிரீமியம் எவ்வளவு?

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாதாந்திர பிரீமியம் தொகையாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 4800 ரூபாய் பிரீமியம். அதோடு 18 சதவீத ஜிஎஸ்டி. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தக் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது.

அரசு உத்தரவு!

மாநில அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், பென்சனர்கள், குடும்ப உறுப்பினர்கள், அரசு பல்கலைக் கழக அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் உள்ளிட்டோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில நிதித் துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் வெளியிட்டுள்ளார்.

5 லட்சம் பேர் பயன்!

கேரள மாநில அரசின் இத்திட்டத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்