ஆப்நகரம்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சலுகை.. தமிழக அரசு நடவடிக்கை!

ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jul 2022, 12:58 pm
தமிழக அரசின் முன்னோடித் திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எவ்வித குறைகளும் இல்லாமல் பொது விநியோகத் திட்டப் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்காகத் தொடர்ந்து சேவை வழங்கி வரும் அவர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் விதமாக ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Samayam Tamil ration employees


இதன்படி, இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக மக்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தின் வாயிலாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வரும் நியாய விலைக் கடையின் முன்களப் பணியாளர்களுக்கு அப்பல்லோ மருத்துவ குழுவுடன் இணைந்து முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, சென்னை (தெற்கு) மண்டலத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் நடத்தும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு கடந்த ஜூன் 26ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் 468 பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

அதனைத் தொடர்ந்து, சென்னை (வடக்கு) மண்டலத்திலுள்ள பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, சைதாப்பேட்டை தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் மற்றும் பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள் நடத்தும் 583 நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 727 பணியாளர்களுக்கு நேற்று (ஜூலை 8) சென்னை மாதவரத்தில் உள்ள விவசாய கூட்டுறவு பணியாளர்கள் பயிற்சி நிலையத்தில் அப்பல்லோ மருத்துவ குழுவுடன் இணைந்து முழு உடற் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Ration Card: விவசாயிகளுக்கு புதிய ரேஷன் கார்டு.. மாநில அரசு அறிவிப்பு!
இந்த முகாமை தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தொடங்கி வைத்தார். இதில் 432 ஆண், 295 பெண் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாம் நடைபெறும் விவசாயக் கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையமானது, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள், நகர்புற கூட்டுறவு கடன் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு துறைசார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்