ஆப்நகரம்

விமானப் பயணிகளுக்கு கொரோனா இன்ஷ்யூரன்ஸ்!

விமானப் பயணிகளுக்கு ரூ.3 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2020, 2:53 pm
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் சரக்கு விமானங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் உள்நாட்டினருக்கான சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மே 25ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் விமான நிறுவனங்களுக்குப் பெருத்த வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil spicejet


ஊரடங்கு தளர்த்தப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டாலும் கொரோனா பரவல் அச்சத்தால் விமானப் பயணம் செய்ய பெரும்பாலானோர் தயக்கம் காட்டுகின்றனர். பாதுகாப்பு அம்சங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும் கொரோனாவின் தீவிரத்தைப் பார்க்கும்போது முடிந்த வரையில் விமானப் பயணங்களைத் தவிர்க்கவே விரும்புகின்றனர். இதுபோன்ற சூழலில் விமானப் பயணிகளின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அவர்களுக்கான பணிகள் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் வகையிலும் புதிய காப்பீட்டு வசதியை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் பணத்தை வைத்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி?

இதற்காக கோ டிஜிட் இன்ஷ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஸ்பைஸ்ஜெட் கைகோர்த்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தில் பயணிகள் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரையில் கொரோனா காப்பீடு பெறலாம், இதற்காக ஆண்டுக்கு ரூ.443 முதல் ரூ.1,564 வரையில் பிரீமியம் செலுத்தினாலே போதும். இதன்படி, 30 முதல் 60 நாட்கள் வரையிலாக மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் ஏற்கப்படுகின்றன. விமானப் பயணிகளுக்கு கொரோனா உறுதியானால் அவர்களுக்கான சிகிச்சைக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இன்ஷ்யூரன்ஸ் பாலிசியானது விண்ணப்பித்த ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மல்லையாவின் கடனை வாங்க மறுக்கும் வங்கிகள்!

கொரோனா பாதிப்பால் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இதுபோன்ற திட்டங்கள் மூலமாக வளர்ச்சிப் பாதைக்கு மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் வருவாயும் அதிகரிக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்