ஆப்நகரம்

கொரோனா பீதி: சம்பளத்தில் கை வைக்கும் விமான நிறுவனங்கள்!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் வருவாய் பாதித்துள்ளதால் மார்ச் மாத சம்பளத்தைக் குறைத்து வழங்குவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 8:53 pm
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளும் ரயில்களும் விமானங்களும் செயலிழந்து நிற்கின்றன. சரக்கு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. வெளிநாட்டு விமானப் பயணமும் முடங்கியுள்ளது. இதுபோன்ற சூழலில் இந்திய விமானத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய விமானங்கள் நிதி நெருக்கடியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் அவற்றின் இழப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
Samayam Tamil ஸ்பைஸ்ஜெட்


இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தனது ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்துள்ளது. மார்ச் மாதத்துக்கான ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரையில் குறைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் தனது மார்ச் மாத சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துப் பெறப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதை மட்டும் செய்யுங்க... வர்த்தகர்கள் வலியுறுத்தல்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கான சம்பளமும் குறைவாக வழங்கப்படவுள்ளது. ஒருவேளை ஊரடங்கு உத்தரவு காலம் நீடித்தால் அடுத்து வரும் மாதங்களிலும் சம்பளப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு முன்னரே இண்டிகோ நிறுவனமும் தனது ஊழியர்களின் சம்பளத்தை 5 முதல் 20 சதவீதம் வரையில் குறைக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. மற்ற விமான நிறுவனங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் சூழல் நிலவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்