ஆப்நகரம்

இந்தியாவிடம் 500 பேருந்துகளை வாங்கும் இலங்கை!

15 மில்லியன் டாலர் தொகைக்கு இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகளை வாங்கி இயக்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Samayam Tamil 10 Jan 2020, 6:09 pm
இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்‌ஷே சமீபத்தில் இந்தியா வந்துசென்றார். இப்பயணத்தில் இலங்கை - இந்தியா இடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை அரசுக்கு 500 பேருந்துகள் வழங்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக இலங்கை அரசு 15 மில்லியன் டாலர் செலவிடுகிறது. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடன் வழங்க நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Samayam Tamil இந்தியாவிடம் 500 பேருந்துகளை வாங்கும் இலங்கை


இலங்கை நாட்டில் மக்களுக்கான சாலைப் போக்குவரத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த 500 பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து வாரியத்தால் இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 400 பேருந்துகள் 50 முதல் 54 இருக்கைகள் கொண்டவையாகவும், 100 பேருந்துகள் 32 முதல் 35 இருக்கைகள் கொண்டவையாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பணம் இருந்தால்தானே கடன் கொடுக்க முடியும்!!

சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில், இலங்கை அரசுக்கு 450 மில்லியன் டாலர் வரையில் கடன் உதவியை இந்தியா வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு 50 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. இலங்கை அதிபராக ராஜபக்‌ஷே தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் வாங்க யாருமே இல்லையா... அடி வாங்கிய விற்பனை!

இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் வரும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததையடுத்து, மூன்று நாள் பயணமாக நவம்பர் 28ஆம் தேதி இந்தியா வந்தார் ராஜபக்‌ஷே. இந்தியா வந்த அவர் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்