ஆப்நகரம்

இதுக்கு ஏர் இந்தியா பரவால போல... பெருத்த நஷ்டத்தில் பறக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.169 பில்லியனுக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

Samayam Tamil 5 Feb 2020, 3:20 pm
இந்தியாவின் பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நீண்ட காலமாகவே போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாமலும் பெருத்த கடன் சுமையாலும் தவித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்றுத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஏர் இந்தியா தத்தளிப்பதைப் போலவே இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil இதுக்கு ஏர் இந்தியா பரவால போல பெருத்த நஷ்டத்தில் பறக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்


பொதுத் துறை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 2009ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட பிறகிலிருந்து இதுவரையில் மொத்தம் ரூ.169 பில்லியன் வரையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும் இதன் இழப்புகள் ரூ.17.2 பில்லியன் ஆகும். இந்த விவரங்களை அந்நாட்டின் நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

பணம் கிடைக்காத 5 கோடி விவசாயிகள்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பது குறித்து அந்நாட்டின் தனியார் ஆலோசனை அமைப்பான அட்வொகேட்டா கூறுகையில், ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களால்தான் இலங்கை அரசின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் பல்வேறு முறைகேடுகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக சென்ற வாரத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயலதிகாரியின் மனைவிக்கு ஏர்பஸ் நிறுவனம் 16 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தங்கம் விலை: அட நம்புங்கப்பா... இன்னைக்கும் விலை குறைஞ்சிருக்கு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் நிர்வாகமும், கொள்கை உருவாக்கமும் சரியாக இல்லாதது அரசின் இழப்புகளை அதிகரிப்பதாக அட்வொகேட்டா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. பணியாட்களை நியமிப்பது, நிறுவனத்தை முன்னோக்கி வழிநடத்துவது போன்றவற்றிலும் குறைபாடுகள் இருப்பதால்தான் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் விமானங்களின் எண்ணிக்கை, சேவை வழங்கும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாகத் திகழ்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்